Tuesday, December 25, 2012

யாரு பெரிய மனுஷன்?


 


Examku எவனோ எழுதினத படிச்சிட்டுபோய்
State First வாங்குறவன்  மனுஷன்.....



But, ஒண்ணுமே படிக்காமபோய் தன்னோட
சொந்த கதைய எழுதி பாஸ் பண்றான் பாரு





அவன்தான்யா பெரிய மனுஷன்............

Monday, November 26, 2012

"நான்"

 

தோன்றி, நான் பின் வளர்ந்து வந்தேன்,
இனி நான் என்ன செய்வேன்;
வீண் வாழ்வும் வாழ்ந்தேதான்
மாய்ந்தும் போவேனோ மண்ணில்..
இறப்பிற்கு பயமில்லை; பயம்தான்
பயனின்றி வாழ்வை வாழ்வதற்கு;
ஏதும் செய்வேனோ இவ்புவியினில்
வாழும் மானுடர்க்கு; என்
முடிவை  எட்டும் முன்னால்...
"நான்" என்பதை மறந்தாலே - தானே
யாவும் மாறிடுமோ; இனி
நான்  மாறிடுவேன் புதிதாய்;
"நான்" என்பதை மறந்து
மீண்டும்  குழந்தையாய் ...

Monday, June 18, 2012

Elephants Can Jump



Fact: Elephants are the only mammals (which live in land) in the world that cannot jump. Although they are the largest land animal, they lack the ability to jump. This is because they don't have the flexibility or spring mechanisms that are required to jump.

 Whenever I started talking with my friend, it ends up in an argue or bet.
So it happened today too. Even though he was right, I won it by playing a small trick.
Today as usual in the middle of a talk, I watched a Dog jumping and I asked my friend to see that and said, “Hey, see how that animal jumps, it’s awesome”.
He laughed and replied, “Do you know there is a mammal which lives in land can’t jump”
I said, “It’s impossible, all animals have the ability of jumping”.
Now he jumped enthusiastically, and asked “BET!!!???”
By seeing his enthusiasm, I thought myself, "Sure, I'll lose my money, if I bet". Anyhow I wished to win the bet. I thought something tricky and questioned him, “is that question means only the jump or whether it includes the jump from where and how?”
He still doesn't understood my trick and replied, “The question is whether the animal can jump or not, that's it.. it doesn't include from where and how... are you ready for the bet?” and laughing.
He thought sure he will win the bet and he was not aware of my trick.. 
I said, “Okay I’m ready for the bet, all mammals which lives in land can jump”.
He laughed at me, “you’re going to lose your bet money, and Elephant is the only mammal which lives in land can’t jump, because of its body weight and flat legs”.
I replied, “hmm… hey but Elephants can jump from the Hills!!”
He said, “Yeah, the Elephants can jump from the Hills!!” he is little bit confused and suddenly, “err… no… I don’t mean that”.
I replied, “I mean that, the question is only about jump, not from where and how… Give me the bet money”
He stood speechless now. He bites his tooth angrily and gave me the bet money…



“Friends, whatever it may be… you can change it with your brain and wit…
So think different and positive, and win the GAME (of life)”


---
With Regards
JAY

Monday, June 11, 2012

தலைகால் புரியாமல்

"வேண்டாம், தயவு செஞ்சு என்னய மன்னிச்சு விட்டுருடா" என்று அவன் கதறினான்.
"மன்னிச்சு விடவா உன்ன இங்க வரவெச்சேன், ம்ஹும், உன்ன விட மாட்டேன்" என்றவாறே அருவாளுடன் அவனை நெருங்கினான்.
'உன் கால பிடிச்சு கேட்டுக்கிறேன், என்னய விட்டுருடா" என மறுபடியும் கதறினான்.
"என்ன கால்ல விழுகறியா, ஹா.. ஹா... ஹா... ஏண்டா சாதி வெறில நீங்க என் அண்ணனுக்கு பண்னினதுக்கு வட்டி தரனும்ல, வெட்டின கால்ல விழுகுறேங்குறியா"



"வேண்டாம்டா, விட்டுறுடா!!???"
"எங்க அண்ணனுக்கு நடந்தது இங்க உனக்கு நடக்க போகுது, இனி நீ நடமாடவே முடியாதுடா" என்றவாறே அருவாளை ஓங்கினான்.
அலறி முடிவதற்குள் அவனது தலை தரையில் விழுந்தது.
இரண்டொரு வாரங்களுக்கு முன் சாதி வெறியால் தன் அண்ணனை கொன்று, தனது காலையும் வெட்டியவனை பழிவாங்கிய மகிழ்ச்சியில் அந்த தலையை தூக்கினான்.
மெதுவாக நொண்டியபடியே காவல் நிலயத்தை நோக்கி நகரத்தொடங்கினான் சிரித்துக்கொண்டே.....

Monday, June 4, 2012

வாழ்வின் குற்றங்கள்

வாழ்வின் குற்றங்கள்
வெளிச்சம் காட்டின
வானவீதியில்!!!

தேடல்

இரவில் தேடிக்கொண்டிருக்கிறேன்
நான் தொலைத்துவிட்ட
வெளிச்சங்களை!!!

அழகு

அழகிய மலைத் தொடர், அழகான புல்வெளி,
ஆடிவரும் ஆறு; ஆகாயம் தரும் மழை,
வானவில்லின் அழகு வண்ணங்கள்;
பசுமை பூக்கின்ற மரங்கள் - காலை,
மாலை, இரவு வேளையில் மாறிடும்
வண்ணங்கள்; காற்றில் ஆடும் கொடிகள்;
ஆகா!! எத்துனை அழகுஎன்னால்தான்
பார்க்கமுடியாது பிறந்துவிட்டேன் 
குருடனாக !!

Sunday, May 27, 2012

சென்னையில் எனது முதல் “Passenger Train” பயணம்

சென்னைக்கு சென்ற முதல் இரண்டு நாட்கள் நான் Bus-ல்தான் சென்று கொண்டிருந்தேன். ஒரு நண்பர், "Passenger Train -ல் சென்று வந்தால் நேரம் மிச்சமாகும், செலவும் குறையும்" என்றார். அவரிடம் எங்கு ரயில் ஏற வேண்டும், எங்கு இறங்க வேண்டும் என விவரமாக கேட்டுக்கொண்டேன். 

பின் வேலை முடிந்து சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் கிண்டிக்கு டிககெட் வாங்கிவிட்டு படியில் ஏறுகையில் கிண்டி செல்லும் ரயில் வந்தது.

நான் ரயிலைப்பிடிக்க அவசரமாக ஓடினேன். ரயில் நின்றவுடன் ஏறமுற்படுகையில் பின்னால் யாரோ தட்டியதுபோல இருந்தது. "இந்த ரயில்லலாம் ஏறக்கூடாது" என்று ஒரு லேடி கான்ஸ்டபிள் தடுத்தார்.

நான், "டிக்கெட், இருக்கு" என்றேன். அந்த லேடி கான்ஸ்டபிள் பேச முயல்வதற்குள், பின்னாலிருந்த சில இளைஞர்கள், "ஊருக்கு புதுசா!" என்றவுடன் நான் "ஆமாம்!!" என்பதுபோல தலையை ஆட்டினேன்.





தங்களுக்குள் சிரித்துக்கொண்ட அவர்கள், "இது கிழவிங்க போற Train தம்பி. பின்னால நம்ம யூத் Train வருது அதுல போலாம் வா!!" என்று என்னை இழுத்துச்செல்லவும், அந்த லேடி கான்ஸ்டபிள்  தலையில் அடித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தார்.

அதன் பிறகுதான் தெரிந்தது அது சென்னையில் பெண்களுக்கென வரும் சிறப்பு ரயிலென்று. பின்னர் நான் அந்த இளைஞர்களுடன் அடுத்து வந்த ரயிலில் ஏறினேன்.

இதை நான் என் நண்பனிடம் சொல்லவும், அவன் விழுந்து விழுந்து சிரித்தான்.

நான் அவனிடம், "அரசியல்ல, இதெல்லாம் சாதாரணமப்பா" என கவுண்டமணி டயலாக் சொல்ல, அவன் சிரிப்பு இரட்டிப்பானது.

"என்ன கொடுமை சார்!!!"

Monday, May 21, 2012

Learn From Mistakes





என் நினைவுகள்

 அன்றும் வழக்கம்போல கிண்டியிலிருந்து சேத்துப்பட்டிற்கு ரயில் ஏற காத்திருந்தேன். என் அருகே என் வயதையொத்த ஓர் இளைஞன் பதற்றத்துடன் நின்றிருந்தான். நானும் வேளைக்குச்செல்லும் அவசரத்தில் இருந்தேன். சிக்னல் வந்த சில நேரங்களிலேயே ரயிலும் வந்து சேர்ந்தது. நான் ஏறுவது மதியவேளை என்பதால்  கூட்டம் அவ்வளவு இருக்காது. ரயில் நின்றதும் நான் ஏறச்சென்றேன். நான் கதவருகே சென்றதும் என்னை இடித்துக்கொண்டு அவன் உள்ளே சென்றான். நானும் உள்ளே ஏறி கோபத்தில் அவனிடம், "வண்டி நிக்குதில்ல, கூட்டமும் இல்ல, சீட்டும் நிறைய இருக்கு, அப்புறம் ஏன் சார் என்னை தள்ளிவிட்டுட்டு ஏறறிங்க??"




அவன், "சாரி சார், ரொம்ப அவசரம், ப்ளீஸ் மன்னிச்சிடுங்க?"
அவனது முகத்தை பார்க்க ரொம்ப பாவமாக இருந்தது, நான்,"சரிங்க என்ன அவசரமா இருந்தாலும் பார்த்து வாங்க!!" என்றேன்.
அவன்,"சாரி சார், தாங்க்யூ சார்" என்று சொல்லிவிட்டு சீட்டில் அமர்ந்தான். நானும் அவனை முறைத்துக்கொண்டே எதிரில் இருந்த சீட்டில் அமர்ந்தேன். அவன் மாம்பலம் ரயில் நிலையத்திலேயே, அதே அவசரத்தில் இறங்கி ஓடினான். நான் சலித்துகொண்டே அவன் மறையும்வறை அவனை பார்த்துகொண்டிருந்தேன். அந்த நாளும் வழக்கம்போல கறைந்தது.

இது நடந்து மூன்று நாட்களுக்கு பிறகு, நான் ரயில் ஏறிய பிறகு ஓடும் ரயிலில் அதே அவசரத்துடன் அவன் ஏறினான். நான் அவனை முறைப்பதை பார்த்து அவன் என்னருகே வந்து, "ஹலோ சார்!!, என்னை ஞாபகம் இருக்கா!!" என்றான். "இன்னும் அதே அவசரத்தோடதான் இருக்கிங்க போலிருக்கு" என்றேன். விடையேதும் கூறாமல் என்னைப்பார்த்து சிறித்துக்கொண்டே அவன் சீட்டில் அமர்ந்தான். பின் மாம்பலத்தில் ரயில் நின்றதும், அன்று போல அதே அவசரத்தில் இறங்கி ஓடினான். நான் அவனை எட்டிப்பார்த்து சிரித்தேன்.

பின் சில நாட்களாக அவன், அதே நேரத்தில், நான் செல்லும் அதே ரயிலில் வரத்தொடங்கினான். என்னுடனும் நன்றாக பேசினான். நான் அவனிடத்தில் அவ்வளவாக ஏதும் கேட்கவில்லை, அவனாக தன் பெயர் நாதன் என்றும் கிண்டியில் வேலை செய்வதாகவும் சொன்னான். இந்த நட்பு சிறிது நாள் தொடர்ந்தது. ஒரு நாள் நான் அவனிடம், "ஏன் நீங்க அவ்ளோ அவசரமா அன்னிக்கு வண்டில ஏறினிங்க" என்றேன். "கொஞ்சம் பெர்சனல் சார்" என்றான். நான், "ஓ, சாரி தெரியாம கேட்டுட்டேன்" என்றேன்.

அவன், "பரவால்ல சார், உங்ககிட்ட சொல்றத்துக்கு என்ன, நான் ஒரு பொண்ன ரொம்ப நாளா லவ் பண்னி ஒரு நாள் ப்ரபோஸ் பன்னேன். அப்ப அவங்க அடுத்த நாள் மாம்பலத்துக்கு வர சொன்னாங்க. அன்னிக்குன்னு பாத்து நான் அரைமணி நேரம் லேட். நான் அங்க போகறத்துக்குள்ள அவங்க அங்கிருந்து போயிட்டாங்க." என்றான் சோகத்துடன்.

நான், "அப்புறம் என்ன ஆச்சு சார்" என்றேன். "ம்ம், மாம்பலம் வந்துடுச்சு", என்றான். "என்ன?" என்றேன். "நான் போகனும் சார், கண்டிப்பா மீதியை நாளைக்கு சொல்றேன். ஸ்டேஷனுக்கு சீக்கிறம் வாங்க" என்றான். "அப்ப நாளைக்கும் அரைமணி நேரம் லேட்டா?!!" என்றேன். என்னைப்பார்த்து சிறித்துக்கொண்டே சென்றான்.

ஆனால் அடுத்த நாள் சொன்னபடியே சிறிது நேரத்திற்கு முன்னதாகவே வந்து சேர்ந்தான். "என்ன சார், இதே பங்க்சுவாலிட்டியை அன்னிக்கு மெயிண்டெயின் பண்ணிருக்கலாம்ல!!" என்றேன். அவன் மெலிதாக புண்னகைத்து, "விடுங்க சார், அதான் முடிஞ்சுபோச்சுல்ல" என்றான். நான், "அப்ப லவ் அவுட்டா!!" என்றேன். "சார் நீங்க வேற, அன்னிக்கு அது முடிஞ்சுபோச்சு சார். ஆனா லவ் கண்டின்யூ ஆகுது" என்றான். "புரியலயே!" என்றேன் நான்.

-- Journey to be continued.....

Quotes

Visit this Quotes Site, its really an inspirational and most useful one. Below I provided you the link for the site and an example quote from the site.

http://www.quotesbuddy.com

நாம் செய்யும் தவறுகள்

நாம் செய்யும் தவறுகள் நமக்கு
வலிகளை மட்டும் தருவதில்லை,
உடன் அனுபவத்தையும், பின்
வெற்றியையும் சேர்த்து தருகிறது.



தவறுகள்

நீயே உன் ஆசான்
படித்து கற்றுக்கொள் - உன்
தவறுகளிலிருந்து


குறையென்று ஏதுமில்லை

குறையென்று ஏதுமில்லை
எனக்கு - யாதுமிங்கு
நிறையானதால்



Monday, March 19, 2012

கோபம்

கோபத்தில் சொல்லும் வார்த்தைகள் எல்லாம் வார்த்தைகளே அல்ல
அவை வெறும் கோபத்தின் வெளிப்பாடு மட்டுமே !!!


பிறந்தநாள் வாழ்த்துகள்

அன்று மறந்ததை சொல்ல
காத்திருந்தேன் ஒரு வருடம்
பிறந்தநாள் வாழ்த்துகள்



Monday, March 5, 2012

கரையும் நிமிடங்கள்!!!

நிமிடங்கள் கரைந்து செல்கிறது
அதனுடன் விரைகிறது என்
கனவுகளும்


நேரத்தினூடே கடந்து செல்கிறது
நான் சேர்த்து வைத்த
கனவுகளும்

பயம்

ராமு ஒன்பது வயது முடிந்து பத்து வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் சிறுவன். ராமுவும் அவனது குடும்பமும் அந்த ஊருக்கு புதிதாக குடிவந்தவர்கள். ராமுவிற்கு இருள் என்றாலே பயம். அதிலும் பேய், பூதம், பிசாசு முக்கியமாக ரத்தக்காட்டேரி என்றால் பயத்தில் அழுது ஆர்பாட்டம் செய்துவிடுவான். அந்த ஊரில் அவனுக்கு விமன் என்று ஒரு புதிய நண்பன் கிடைத்தான். இருவரும் எப்பொழுதும் சேர்ந்தே இருந்தனர். காலையில் பள்ளிக்குப்போவது, மாலையில் விளையாடுவது, ஊர் சுற்றுவது என்று ஒன்றாகவே இருந்தனர். ராமு எப்பொழுதும் விமனின் வீட்டிலேயே இருந்தான். சில நேரங்களில் அவன் அங்கு விளையாடிவிட்டு அப்படியே தூங்கிவிடுவதுமுண்டு. அந்த நேரத்தில் ராமுவின் அப்பா அங்கு வந்து அவனை வீட்டிற்கு தூக்கிக்கொண்டு செல்வார்.

அந்த ஊரில் ஒரு வினோதமான நம்பிக்கை இருந்தது. வருடத்தில் ஒரு நாள் மட்டும் அந்த ஊரில் சூரிய ஒளியே இருக்காது. அன்று மட்டும் மாலை நான்கு மணிக்கெல்லாம் இருட்டிவிடும். அன்று மட்டும் யாரும் மூன்று மணிக்குமேல் யாரும் வெளியே வரமாட்டார்கள். அன்று வெளியே வந்தால் ரத்தக்காட்டேரிகள் தங்களை கொன்று ரத்தத்தை உரிஞ்சிவிடும் என பயந்தனர். அந்த நம்பிக்கை இன்றும் தொடர்ந்துகொண்டு இருந்தது. மீறி வெளியே சென்றவர்களின் பிணம் கூட மிஞ்சாமல் காணாமல் போயினர்.

ராமுவிற்கு இது தெரியுமாதலல் மிகவும் பயந்தான். வழக்கம்போல அந்த நாளும் வந்தது. அன்றுதான் ராமுவிற்கு பிறந்தநாளும் வந்தது. அன்று பிறந்தநாள் என்பதால் ராமு மிகவும் சந்தோஷமாக இருந்தான். புது உடை மாற்றிகொண்டு தனது நண்பர்களை பார்க்க சென்றான். விமனின் வீட்டிற்கு சென்று அவனை அன்று தன் வீட்டிற்கு அழைத்தான். ஆனால் அன்று மட்டும் வேண்டாம் என்று விமனின் அம்மா மறுத்தார். ராமுவும் விமனும் சிறிது நேரம் பிடிவாதம் பிடிக்கவே விமனின் அம்மா, "சரி, வெளிய எங்கயும் சுத்தாம நேரா உங்க வீட்டுக்கு மட்டும் போறதா இருந்தா சரி" என்று அனுப்பிவைத்தாள்.


நடக்கப்போகும் விபரீதம் அறியாமல் சிறுவர்கள் இருவரும் அங்குள்ள மைதானத்தில் விளையாடச்சென்றனர். கொஞ்சம் கொஞ்சமாக அங்கு இருள் படரத்தொடங்கியது. இருள் வளர வளர சிறுவர்களுக்கு பயம் வரத்தொடங்கியது. ஆந்தையின் ஓலமும், ஓநாய்களின் ஊளைச்சத்தமும் ஓங்கியது. சிறுவர்கள் இருவரும் பயத்தில் ஓடத்தொடங்கினர். தூரத்தில் சலங்கைச்சத்தமும், பேய்ச்சிரிப்பும் அவர்களின் பயத்தை அதிகரிக்க அவர்களின் ஓட்டமும் வேகமெடுத்தது.

எப்படியோ இருவரும் ராமுவின் வீட்டை அடைந்து நிம்மதிப்பெருமூச்சு விட்டனர். வழக்கத்திற்குமாறாக அன்று வீட்டின் எல்லா கதவுகளும் திறந்து இருந்தது. ராமு விமனை இழுத்துக்கொண்டு சமையலறைக்கு ஓடினான். ராமு, "அம்மா, தண்ணி கொடுமா!", என்றவன் அங்கு கண்ட காட்சியை கண்டு பயந்து நடுங்கினான். இருவரும் அங்கிருந்து மாடிக்கு ஓடினர். அவன் அம்மாவிற்கு பதிலாக ஒரு ரத்தக்காட்டேரி அங்கு இருந்தது. நுழைந்த ஒவ்வொரு அறையிலும் ரத்தக்காட்டேரி இருந்தது. இருவரும், வீட்டிற்குள் ரத்தக்காட்டேரிகள் வந்துவிட்டது இனி தப்ப முடியாது என எண்ணி பயந்தபடியே ஒரு அறையினுள் ஓடினர்.

இருவரும் அங்கிருந்த அறையில் ஆளுக்கு ஒரு மூலையில் பயந்தபடியே நின்றிருந்தனர். அப்போது அந்த அறையில் ரத்தக்காட்டேரிகள் நுழைந்தன.. இப்போது ராமுவிற்கு வினோதமாகவும், விமனுக்கு பயம் அதிகரித்துமிருந்தது. அங்கிருந்த ரத்தக்காட்டேரி ஒன்று, "ராமு, நாமும் ரத்தக்காட்டேரிதான். ஆனா இந்த நாளைத்தவிர வேற எப்பவும் சூரிய ஒளியில் நாம கருக மாட்டோம். வருஷத்து ஒரு தடவை மட்டும் நமக்கு முழு பலமும் வரும். மிச்ச நாளில் நாமும் மனுஷங்க மாதிரிதான் இருப்போம். முதல் முதல்ல நமக்கு பத்தாவது பிறந்தநாளன்னிகு அந்த சக்தி கிடைக்கும். இன்னிக்குதான் உன் முதல் உருமாற்றம். உன்னோட வேட்டையை ஆரம்பிச்சிடு", என்றாள்.

ராமுவின் மனித உடல் மறைந்து ஒரு சிறிய ரத்தக்காட்டேரியாக உருமாறிக்கொண்டிருந்தான். அதுதான் அவனது ஆச்சரியத்திற்கு காரணம். இப்பொழுது அவன் முழு ரத்தக்காட்டேரியாக மாறியிருந்தான். அவனால் மனிதவாடையை உனரமுடிந்தது. அவனுக்கு ரத்த தாகமும் கூடியது. ராமுவும், அவனைச்சுற்றியிருந்த ரத்தக்காட்டேரிகளும் சிரித்துக்கொண்டே விமனை நோக்கி நகரத்தொடங்கின.....

How to Add DOCUMENT LOCATION in Excel 2010

To add a document location in Excel 2010 first open a excel spreadsheet. See the highlighted (Custize Quick Access Toolbar).   
                                

Click the list button and select More Commands… option




Now a new dialog box opens. Click on the highlighted arrow button.




Select the “Document Location” from the list and click on the ADD>> button



It will be added to the Quick Access Tool Bar. Now click OK button.




The document location will be appeared on the Quick Access tool bar as highlighted below.


With Regards,

JAY

Monday, February 27, 2012

கோபம்

உலகமே அவனை பாராட்டியது. இந்திய நட்டிற்குள் அவன் அடியெடுத்து வைத்தபோது அவனுக்கு ஏக வரவேற்பு. Formula -1 கார் ரேஸில் தொடர்ந்து 5-வது முறையாக முதலிடம் பிடித்து இந்திய நாட்டிற்க்கு மேலும் பெருமை சேர்த்தான். அன்று மாலை அவன் மனைவி, "என்னங்க, உங்க வெற்றி நம்ம நாட்டுக்கு மேலும் பெருமை சேர்த்திருக்கு" என்றாள்.
அவன், "Thanks-மா, உன் ஊக்கம்தான் என்னை எப்போதும் மேல கொண்டுட்டு வருது", என்றான். அவள் வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே, "சரிங்க, உங்க வெற்றிய கொண்டாடுற வகையில நாம இன்னிக்கு ஷாப்பிங்க் போயிட்டு அப்படியே வெளிய டின்னருக்கு போகலாமா??!!" என்றாள்.
"சரி போகலாம், எங்க போகறதுன்னு நீயே சொல்லு", என்றான் உற்சாகத்துடன். அவள், "என்னங்க, வழக்கமா கார்லதான வெளிய போவோம்!!" என்றாள். அவன்,"ஆமாம்!??!", என குழப்பத்துடன் பதிலளித்தான். அவள்,"இன்னிக்கு ஒரு நாள் மட்டும் நாம பைக்ல வெளியே போலாமா!!" என்றாள்.


சட்டென முகம் சிவந்தது அவனுக்கு, "ஒரு Famous Car Racer, Bike ஓட்டீட்டு போனா நல்லாவா இருக்கும்??!!!, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், Car-லயே போலாம், போய் கிளம்பு" என்றான். அவள் அந்த கோபத்தை சற்றும் எதிர்பாறாதவளாய், சிறிது நடுக்கத்துடன், "சரிங்க, நான் ரெடியாயிட்டு வரேன்" என உள்ளே சென்றாள்.

உலகின் சிறந்த Car Racer-ஆக இருந்தும், பாவம், அவனுக்கு Bike ஓட்டத்தெரியாது!!!..

முயற்சி செய்!!


முயலாமல் சொல்லாதே முடியாதென்று
முயன்று துணிந்து செயல்படு - பின் உன்
தோல்விகளும் மாறும் ஏணிப்படிகளாய்
அது உன்னை தூக்கி நிறுத்தும்
வெற்றியின் பக்கத்தில்!!!!

கனவுகள் காண்!!

கனவுகள் காண்
கனவை மட்டும் காணாதே
நாளும் நடந்திடு நீ
கண்ட கனவை நனவாக்க
வெற்றி உன் கைகளில்!!!
 


Strive towards your Dreams to make it real..

பாடம்

வகுப்பறை ஆசிரியர் நுழைந்தவுடன் வழக்கம்போல அமைதியானது. ஆசிரியர், "இன்னிக்கு Class Test சொல்லியிருதேனே, எல்லோரும் படிச்சிடிங்களா?" என்றார். வகுப்பறை சிறிது நேரம் அமைதியாக இருந்தது. உடனே ஆசிரியர், "சரி, யாரெல்லாம் படிக்கலயோ, அவங்கல்லாம் எழுந்து நில்லுங்க" என்றார். பயந்தபடியே சில மாணவர்கள் எழுந்து நின்றனர்.


 
உடனே ஆசிரியர் கோபத்தில், "நம்ம ராஜாவைப்பாருங்க, அவன் எப்போதும் நல்லா படிக்கறான்ல, உங்களுக்கு மட்டும் என்னவாம், இன்னக்கி பூரா இப்படியே நில்லுங்க" என்றவர், "இன்னிக்கு Class Test இல்ல, கூட்டாண்மை பாடம் நடத்தப்போறேன். கவனத்த சிதறவிடாம பாடத்த கவனியுங்க", என்றார்.
பாடத்தில் ஒரு பகுதியை ஆசிரியர் விளக்கிக்கொண்டிருந்தார். அப்போது அவர், "இப்போ ஒரு நிறுவனத்தில் ஒரு தொழிலாளி நல்லா வேலை செய்யறார், இன்னொருவர் அவரைவிட கொஞ்சம் மந்தமா வேலை செய்யுறார். அதனால நல்லா வேலை செஞ்சவரை பாராட்டிட்டு, அவர் முன்னாடியே, வேலைல தவறு செஞ்சவரை திட்டக்கூடாது. அப்படி திட்டினா அதுவே அவரது கவனச்சிதறலுக்கு ஆளாக்கிடும், மேலும் தவறுகளுக்கும் வழிவகுக்கும்" என்று கூரியவருக்கு ஏதோ தட்டுப்பட்டு முகத்திலறைந்தாற்போல இருந்தது. உடனே அவர் நின்று கொண்டிருந்த மாணவர்களைப்பார்த்து, "சரி பசங்களா, நின்னது போதும் உட்காருங்க. இனிமே நல்லா படிச்சிட்டு வாங்க, சரியா!!" என்றார்.
மாணவர்களும் சந்தோஷமாக தலையாட்டிவிட்டு அமர்ந்தனர். ஆசிரியர் தன் பாடத்தை தொடர்ந்தார்.

முரண்பாடு


 லாட்டரிச்சீட்டு தடை செய்யப்பட்டு ஒரு மாதமாகிவிட்டது. அன்று காலை நான் வழக்கம்போல ஜாக்கிங் சென்றுகொண்டிருந்தேன். வரும் வழியில் என் நண்பன் ராமு. "டேய்!!, பார்த்து ரொம்ப நாளாச்சே எப்படிடா இருக்க !!" என்றவன், "நம்ம மோகன் வீட்ல இருக்கறவங்க இப்பதாண்டா ரொம்ப சந்தோஷமா இருக்காங்க" என்றான்.
"ஏண்டா!, என்ன விஷயம்!!" என்றேன். ராமு, "மோகனுக்கு ஒரு கெட்ட பழக்கமும் இல்ல, ஆனா சரியான லாட்டரிச்சீட்டு பைத்தியம், வர்ற காசு பாதியும் லாட்டரிச்சீட்டு வாங்கியே செலவு செய்யுறவன். இப்ப லாட்டரி சீட்டை தடை செஞ்சதால பணம் சரியா வீடு போய் சேருது" என்றான்.
அப்படியே பேசிக்கொண்டே நடந்து சென்று கொண்டிருந்தோம். சற்று தொலைவில் ஒரு சிறிய கும்பல். கூட்டத்திற்கிடையே சென்று, "என்ன ஆச்சு!!" என்றேன். கூட்டத்தில் ஒருவர், "லாட்டரி சீட்டு வித்து பொழச்சுகிட்டு இருந்தான். இப்பதான் லாட்டரி சீட்ட தடை பண்னிட்டாங்கல்ல.... அதான் வேற தொழில் செய்யத் தெரியாம தற்கொலை செஞ்சுகிட்டான்" என்றார்.
வாழ்கையில் எத்துனை முரண்பாடுகள் என எண்னியபடியே என் நண்பனுடன் நடையை தொடர்ந்தேன்.