Monday, June 4, 2012

அழகு

அழகிய மலைத் தொடர், அழகான புல்வெளி,
ஆடிவரும் ஆறு; ஆகாயம் தரும் மழை,
வானவில்லின் அழகு வண்ணங்கள்;
பசுமை பூக்கின்ற மரங்கள் - காலை,
மாலை, இரவு வேளையில் மாறிடும்
வண்ணங்கள்; காற்றில் ஆடும் கொடிகள்;
ஆகா!! எத்துனை அழகுஎன்னால்தான்
பார்க்கமுடியாது பிறந்துவிட்டேன் 
குருடனாக !!

No comments:

Post a Comment