Monday, February 27, 2012

கோபம்

உலகமே அவனை பாராட்டியது. இந்திய நட்டிற்குள் அவன் அடியெடுத்து வைத்தபோது அவனுக்கு ஏக வரவேற்பு. Formula -1 கார் ரேஸில் தொடர்ந்து 5-வது முறையாக முதலிடம் பிடித்து இந்திய நாட்டிற்க்கு மேலும் பெருமை சேர்த்தான். அன்று மாலை அவன் மனைவி, "என்னங்க, உங்க வெற்றி நம்ம நாட்டுக்கு மேலும் பெருமை சேர்த்திருக்கு" என்றாள்.
அவன், "Thanks-மா, உன் ஊக்கம்தான் என்னை எப்போதும் மேல கொண்டுட்டு வருது", என்றான். அவள் வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே, "சரிங்க, உங்க வெற்றிய கொண்டாடுற வகையில நாம இன்னிக்கு ஷாப்பிங்க் போயிட்டு அப்படியே வெளிய டின்னருக்கு போகலாமா??!!" என்றாள்.
"சரி போகலாம், எங்க போகறதுன்னு நீயே சொல்லு", என்றான் உற்சாகத்துடன். அவள், "என்னங்க, வழக்கமா கார்லதான வெளிய போவோம்!!" என்றாள். அவன்,"ஆமாம்!??!", என குழப்பத்துடன் பதிலளித்தான். அவள்,"இன்னிக்கு ஒரு நாள் மட்டும் நாம பைக்ல வெளியே போலாமா!!" என்றாள்.


சட்டென முகம் சிவந்தது அவனுக்கு, "ஒரு Famous Car Racer, Bike ஓட்டீட்டு போனா நல்லாவா இருக்கும்??!!!, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், Car-லயே போலாம், போய் கிளம்பு" என்றான். அவள் அந்த கோபத்தை சற்றும் எதிர்பாறாதவளாய், சிறிது நடுக்கத்துடன், "சரிங்க, நான் ரெடியாயிட்டு வரேன்" என உள்ளே சென்றாள்.

உலகின் சிறந்த Car Racer-ஆக இருந்தும், பாவம், அவனுக்கு Bike ஓட்டத்தெரியாது!!!..

No comments:

Post a Comment